Sunday, January 27, 2008

தோழி, எனது மாலை நேர மடிசன் நகரம்...


இளஞ் சிவப்பும், மஞ்சளுமாய்
தொடு வானம்...
பனி போர்த்திய
வெள்ளை பூமி...
இலைகளும் பாரமென உதிர்த்து
ஒற்றைக் காலில்
தவம் இருக்கும் மரங்கள்..
காது மடல் தொட்டுச் செல்லும்
வாடைக் காற்று...
சூடான "ப்ரூ" காபி...


உன்னைப் பற்றிய நினைவுகள்...


உன் பிரிவும் சுகம் தான்...


இனி ஒரு பிறவி எதற்கு?
இனி நான் தாய்
நீ என் சேய்...

செந்தில் செல்லம்மாள் - பாகம் 1

செந்தில் செல்லம்மாள் - பாகம் 2

செந்தில் செல்லம்மாள் - பாகம் 3