இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: பிரியா சகோதரிகள்
இராகம்: வராளி
தாளம்: ஆதி
கந்தனே! கடம்பனே!
கருத்தினில் உறைந்திடும்
கருணை வடிவான குஹனே!
கண்களோ பன்னிரண்டிருந்திடினும்
ஏழையைக் காக்க ஒரு கண்ணும் இல்லையோ?
சரண் என்று கொண்டு உனை
சந்ததமும் பாடினேன்
செவிகளில் விழவில்லையோ?
நற்கதியை அருட்பதம் அண்டினேன்
அடியனை ஆண்டருள் செய்தருள்!
பழனி மலை உறையும் முருகா வா வா!
முருகா வா வா!
கந்தா வா வா!
எனை கா வா வேலவா!
சண்முகா வா வா!
கந்தா வா வா!
எனைக் கா வா வேலவா! (பழனி)
தேவாதி தேவன் மகனே வா!
பரதேவி மடியில் அமரும் குஹனே வா!
வள்ளி தெய்வயானை மணவாளா வா!
சரவண பவ! பரம தயாளா! (முருகா வா வா)
ஆபத்து இருள் அற அருள் ஒளி தரும்
அப்பனே அண்ணலே ஐயா வா வா!
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா!
தாபம் தரு வெயில் அற நிழல் தரும் வான் தருவே
குல குருவே வா!
ஸ்ரீ பத்மனாபன் மருகா! ராம தாசன் வணங்கும்
முத்தைய்யா வா வா!
Thursday, July 17, 2008
கண்கள் இரண்டால்...சுப்ரமணியபுரம்
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத, பகலும் அல்லாத,
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத, படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா?
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை!
(கண்கள்...)
கரைகள் அண்டாத, காற்றும் தீண்டாத,
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்?
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
(கண்கள்...)
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத, பகலும் அல்லாத,
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத, படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா?
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை!
(கண்கள்...)
கரைகள் அண்டாத, காற்றும் தீண்டாத,
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்?
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
(கண்கள்...)
நெஞ்சாங் கூட்டில் நீயே
நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே!
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டிப்போட்டுக் காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல்தானே! இது காதல்தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை
(நெஞ்சாங்கூட்டில்......)
ஏ......விண்ணைத் துடைக்கின்ற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை
என்னைத்தேடி மண்ணில் வரவழைத்து
உன்னைக் காதலிப்பதாய் உரைத்தேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும்
காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொல்லவில்லையே.... இல்லையே
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்த சொல்லும் சிக்கவில்லை எதனாலே
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிவிட்டு
பட்டினியாய்க் கிடப்பாளே அதுபோலே...
(நெஞ்சாங் கூட்டில்........)
ஏ....... சின்னச் சின்னச் செல்லக் குறும்பும்
சீனிச்சிரிப்பும் என்னைச் சீரழிக்குதே
விறுவிறுவென வளரும் பழம் எந்தன்
விரதங்களை வெல்லுதே
உன்னைக் கரம் பற்றி இழுத்து
வளை உடைத்து காதல் சொல்லிடச் சொல்லுதே
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து
என்னைக் குத்திக்குத்தியே கொல்லுதே
காதல் எந்தன் வீதி வழி கையை வீசி வந்த பின்னும்
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே
பிப்ரவரி மாதத்துக்கு நாள் ஒன்று கூடி வர
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே...
(நெஞ்சாங் கூட்டில்........)
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டிப்போட்டுக் காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டெறும்பு போலே ஊர்கிறாய்
காதல்தானே! இது காதல்தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை
(நெஞ்சாங்கூட்டில்......)
ஏ......விண்ணைத் துடைக்கின்ற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை
என்னைத்தேடி மண்ணில் வரவழைத்து
உன்னைக் காதலிப்பதாய் உரைத்தேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும்
காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொல்லவில்லையே.... இல்லையே
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்த சொல்லும் சிக்கவில்லை எதனாலே
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிவிட்டு
பட்டினியாய்க் கிடப்பாளே அதுபோலே...
(நெஞ்சாங் கூட்டில்........)
ஏ....... சின்னச் சின்னச் செல்லக் குறும்பும்
சீனிச்சிரிப்பும் என்னைச் சீரழிக்குதே
விறுவிறுவென வளரும் பழம் எந்தன்
விரதங்களை வெல்லுதே
உன்னைக் கரம் பற்றி இழுத்து
வளை உடைத்து காதல் சொல்லிடச் சொல்லுதே
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து
என்னைக் குத்திக்குத்தியே கொல்லுதே
காதல் எந்தன் வீதி வழி கையை வீசி வந்த பின்னும்
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே
பிப்ரவரி மாதத்துக்கு நாள் ஒன்று கூடி வர
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே...
(நெஞ்சாங் கூட்டில்........)
Subscribe to:
Posts (Atom)