எனது இனிய தோழி செல்லம்மா,
எனக்கு நாவல் படிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுத்தது நீதான். 10வது படிக்கும் வரை, நல்ல நாவல்களை படித்து விட்டு மணிக்கணக்கில் விவாதித்து இருக்கிறோம்.
கல்லூரிக்கு போன பின்னாடி, எனது தேவையும், உணர்வுகளும், தேடல்களும் கொஞ்சம் மாறிப் போனது. உன்னிடமிருந்து ஒரு சிறிய இடைவெளி உருவானது.
நான் நிறைய வித்தியாசமான நாவல்களை படிக்க ஆரம்பித்தேன்.
அவர்களுள் மிக முக்கியமானவர், பாலகுமாரன்...
நான் என்னை அடையாளம் காண உதவியவர்... ஆனால், நான் வழக்கம் போல் என்னை அடிக்கடி தொலைத்து விடுவதுண்டு...
இவருடைய "உடையார்" நாவல், என்னை இராஜ இராஜ சோழனை தோழனாக்கியது...தஞ்சை பெரிய கோவில் பெருஉடையாரை உணரச் செய்தது...
உன்னிடம் பேச மறந்து போன பல விசயங்களில், இதுவும் ஒன்று. உன்னோடு பகிர்ந்து கொள்ளவேன் என்ற நம்பிக்கையில்...
இதோ இங்கு திரு. பாலகுமாரனின் நேர்காணல்.... நன்றி - குமுதம்
திரு. பாலகுமாரனின் நேர்காணல் - ஒன்று
பாலகுமாரனைப் பற்றி...
No comments:
Post a Comment