Tuesday, February 5, 2008

ஏன் இந்த கொலைவெறி...? - தமிழச்சிக்கும் தமிழனுக்கும்..

தோழி,

உன்னால் மட்டும் எப்படி அன்பையே போதிக்க முடிந்தது. சிறுத்தையின் போர்க் குணத்தையும், பட்டுப் பூச்சியின் மென்மையயும் ஒருங்கே செயல் படுத்த முடிந்தது. எனக்கும் கற்று தர முடிந்தது. அஹிம்சா வழியில் போராடி வெற்றி பெற முடிந்தது...

சமீபத்தில், ஒரு மிக்க அறிவுடைய, மெத்தப் படித்த ஒரு பதிவரின் "http://thamizachi.blogspot.com/2008/02/blog-post_04.html" பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும், கொல்லவும் அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடபெற வேண்டும்! - காரணம் ஏன்? - பதிவை படித்தேன்.


இந்த தலைப்பினை நான் கடுமையாக கண்டிக்கிறேன்...

ஒரு பொருப்பான, நேர்மையான, மனசாட்சி உள்ளவர் என்று கூறிக்கொள்ளும்
அவர், ஒரு தவறான வழி காட்டியாக, வன்முறையை தூண்டும்/ஆதரிக்கும் விதமாக எழுதுவது, மிகவும் வறுத்தத்தை அளிக்கிறது.

அன்றைய நிலைமை வேறு... இன்றைய நிலைமை வேறு... ஒரு தலித் குழந்தைக்கும், ஒரு பார்பனக் குழைந்தைக்கும் என்ன வேற்றுமை இருக்க முடியும்? பார்ப்பன வீட்டை கொழுத்தும் போது, பார்ப்பன குழந்தையும் மாட்டிக் கொள்ளாதா?

எனது தலித் சகோதரர்கள், எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் காலம் இது.
எத்துணை IPS and IAS, டாக்டர், எஞ்சினீயர்.....

(நான் எப்பொழுதும் ஜாதீயத்தை எழுத கூடாது என்று எண்ணியவன்... இங்கு தலித் என்றும் பார்பனன் என்றும் எழுதியதற்கு வெட்கப் படுகிரேன்)

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற உலகத்திற்கு கற்றுக் கொடுத்த தமிழினம் இது.

ஆக்கப் பூர்வமான பல படைப்புகள் தரும் நீங்கள், சில சமயம் பெருத்த ஏமாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறீர்கள்.

"ஜாதி இரண்டொழிய வேறில்லை - ஆண், பெண். அவர்கள் இருவரும் சமமானவர்கள். ஆணில்லையேல், பெண்ணில்லை. பெண்ணில்லையேல், ஆணில்லை"

பேனாவின் முனை மிக வலிமையானது... அதனை தவறாக உபயோகிக்கும் போது, அது பேனாவுக்கும் அழகு அல்ல, அவருக்கும் அழகு அல்ல.....

மன்னிக்கவும். இது உங்களுக்கு மட்டும் அல்ல... இதனை போல் மற்றவர்களும் எழுதியிருந்தால் அவர்களுக்கும் தான்...

1 comment:

Anonymous said...

நல்ல எண்ணம்.
வாழ்க வளர்க.

செந்தில் செல்லம்மாள் - பாகம் 1

செந்தில் செல்லம்மாள் - பாகம் 2

செந்தில் செல்லம்மாள் - பாகம் 3